Grama Sabai – Arappor Online Survey


அக்டோபர் 02, 2021 கிராம சபை நடந்தது எப்படி ?

I. தொகுப்புரை

அரசியல் சாசனத்தில் 73 வது திருத்தத்தின் மூலம் அதிகாரம் பெற்ற கிராம சபைகள் எப்படி செயல்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள அறப்போர் இயக்கம் இந்த ஆய்வை மேற்கொண்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 முறை நடக்க வேண்டிய கிராம சபை 20 மாதங்களாக நடக்காமல் முதன் முறையாக அக்டோபர் 02, 2021 அன்று நடந்தது. எனவே கிராம சபை முடிந்தவுடன் இணையவழியில் தமிழ்நாடு முழுவதும் எப்படி நடந்தது என கருத்து கேட்கப்பட்டது, 431 ஊராட்சிகளில் இருந்து 535 நபர்கள் அதன் உறுப்பினர்கள் ஆய்வில் பங்கேற்று பதில்களை தெரிவித்துள்ளனர்.

கிராம சபை விதிகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை என்பதும், பல ஊராட்சிகளில் அது வெறும் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது என்பதும், ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 7 நாட்களுக்கு முன்பு கொடுக்கப்படவேண்டிய கிராம சபை குறித்த அறிவிப்பு பொது மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என 75% ஊராட்சிகளிலும், தீர்மான புத்தகம் கொண்டு வரவில்லை என 43% ஊராட்சிகளிலும், மக்கள் கூறும் பிரச்சனைகளை தீர்மான புத்தகத்தில் எழுதுவதில்லை என 59% ஊராட்சிகளிலும், வரவு செலவு படித்து காண்பிக்கப்படவில்லை என 63% ஊராட்சிகளிலும் தெரிவித்துள்ளனர், மேலும் பல தரவுகள் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது. கிராம சபை நடைமுறைகளுக்கென எழுதப்பட்ட, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் அரசு ஆணை 1998, 2006, மற்றும் கிராமசபை குறித்த அறிவிப்புகள் 2006, 2008 என பல விதிகள் மீறி தமிழ்நாட்டில் அக்டோபர் 02, 2021 அன்று கிராம சபை நடந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் மூலம் அரசுக்கு தெரிவித்துள்ள பரிந்துரைகளில் குறிப்பாக குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்னதாக மக்களுக்கு அறிவிப்பும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவேண்டும் என்றும், கிராம சபை உறுப்பினர்கள் தரும் கோரிக்கைகள் தீர்மான புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்றும், மேலும் வெளிப்படைத்தன்மையுடன் நிதி, வரவு செலவு ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்றும் மிக முக்கியமாக இந்த கிராம சபைகளை ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அதன் உண்மையான நோக்கத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். எனவே அரசு அடுத்த கிராம சபையான ஜன 26,2022 அன்று இவற்றை நடைமுறை படுத்த இந்த ஆய்வு கேட்டுக்கொள்கிறது.

II. முன்னுரை:

ஜனநாயகத்தின் அடிப்படையான கிராம சபை குறித்து அறப்போர் இயக்கம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 02, 2021 நடந்த கிராம சபைக்கு முன்பாக அது குறித்து இணைய வழி விழிப்புணர்வும் செய்யப்பட்டது,

2021 அக்டோபர் 02 அன்று நடந்த கிராமசபையில் கலந்து கொண்டவர்களிடம், கிராமசபை சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்பட்டதா என அறிய இணையவழி ஆய்வை அறப்போர் மேற்கொண்டது,

III. ஆய்வு வழிமுறை

தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இருந்து (சென்னை தவிர) இணையவழி ஆய்வில் பங்கேற்றனர், தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் உள்ளவர்கள், அவர்களின் கடந்த கிராமசபை பற்றி தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்

கிராம சபை ஆய்வு விவரங்கள்

  • தரவுகள் பெறப்பட்ட நபர்கள் எண்ணிக்கை : 535
  • தரவுகள் பெறப்பட்ட கிராம ஊராட்சிகள் எண்ணிக்கை – 431

இந்த ஆய்வு இணையதளம் வழியாக அக்டோபர் 05 முதல் 09, 2021 வரை நடத்தப்பட்டது.

ஆய்வின் குறைபாடுகள்:

இந்த ஆய்வு புள்ளியல் முறையில் ராண்டம் வழியில் ஊராட்சிகளையோ மக்களையோ தேர்ந்தெடுத்து செய்யப்பட்ட ஆய்வு இல்லை. எனவே இது துல்லியமாக கிராம சபையின் நடைமுறைகளை கிராம சபை வாரியாகவோ ஒட்டு மொத்தமாகவோ கணக்கிடாது. சமூக வலைதளத்தில் இதை பார்த்து அந்தந்த ஊராட்சிகளில் இருந்து ஆர்வமுள்ளவர்கள் பங்கெடுத்துள்ளனர். எனவே இது நமக்கு ஒட்டு மொத்தமாக கிராம சபை நடைமுறையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியவும், தோராயமாக (Approximately) எத்தனை சதவீத ஊராட்சிகளில் இந்த பிரச்சனைகள் உள்ளது என்பதை புரிந்து கொள்ளவும் பயன்படும் ஆய்வு. இதை அறிவதன் மூலமாக நாம் அரசுக்கு 2 விஷயங்களை முன்வைக்கிறோம்.

  1. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளை வைத்து அடுத்த கிராம சபையில் இந்த பிரச்சனைகள் எழாமல் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  2. அரசே ஒவ்வொரு கிராம சபையின் பொழுதும் அதை கண்காணிக்கும் வண்ணம் ஒரு சமூக தணிக்கை மற்றும் ஆய்வு செய்து பிரச்சனைகளை துல்லியமாக கண்டுபிடித்து அதை களைய வேண்டும். IV: கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் தரவுகள்

ஒரு கிராம சபை பின்பற்றவேண்டிய சட்ட விதிகள் படி தான் நடக்கிறதா என்பதை அறிய கிராம சபை குறித்த சட்டங்கள் மற்றும் விதிகள் வைத்து கேள்விகள் உருவாக்கப்பட்டது.

கிராம சபை விழிப்புணர்வு:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அரசு ஆணை நிலை எண் 150 ஊரக வளர்ச்சி துறை (சி1) (1998) விதி 3 ன் படி குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்பாக தண்டோரா மூலம் பொது இடங்களில் அறிவிப்பு செய்து மக்களுக்கு கிராம சபை நடப்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும், அப்போது தான் அந்த கிராமத்தின் பெரும்பான்மையான மக்கள் பங்கேற்க வாய்ப்பு உண்டாகும். இந்த சட்டத்தின் படி, கிராம சபை பற்றிய அறிவிப்பு, செய்யப்பட்டதா என அறிய கீழ் காணும் கேள்வி கேட்கப்பட்டது

1. உங்கள் ஊராட்சியில் கிராம சபை குறித்த அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்பட்டதா?

கிராம சபை பற்றிய அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்படவில்லை என 391 அதாவது 75% கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை பற்றிய அறிவிப்பு 7 தினங்களுக்கு முன் கொடுக்கப்பட்டது என 132 அதாவது 25% கிராம ஊராட்சிகளிலும் பதிலளித்துள்ளனர்.

தீர்மான பதிவேடு:

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் அரசு ஆணை நிலை எண் 167 ஊரக வளர்ச்சி துறை (சி4) (1999), விதி 16 ன் படி பதிவேடு கொண்டுவரப்பட்டு, கிராம சபை நிகழ்வுகள் மற்றும் கருத்துகள் அனைத்தையும் பற்றாளர் (Presiding Officer) பதிவு செய்து, இறுதியாக எடுக்கும் முடிவை தீர்மானமாக பதிவேட்டில் எழுதி, கிராம சபை உறுப்பினர்கள் மத்தியில் படித்து காண்பித்து, பற்றாளர் கையொப்பம் இடவேண்டும். அனைத்து தீர்மானங்கள் பதிவிட்ட பிறகு கிராம சபை உறுப்பினர்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற வேண்டும். எனவே முதலில் கிராம சபைக்கு தீர்மான பதிவேடு கொண்டுவரப்பட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

2) கிராம சபையில் தீர்மான பதிவேடு கொண்டு வரப்பட்டதா?

தீர்மான பதிவேடு கொண்டு கொண்டு வரப்பட்டது என 283, அதாவது 57% கிராம ஊராட்சிகளிலும், தீர்மான பதிவேடு கொண்டு வரப்படவில்லை என்று 217, அதாவது 43% கிராம ஊராட்சிகளிலும் கூறியுள்ளனர்.

3) கிராம சபையில் பொது மக்களின் கோரிக்கைகளை தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தார்களா ?

 

 

 


Leave a Comment