Wake Up DVAC - Campaign Meeting


லஞ்ச ஒழிப்புத்துறையின் தூக்கத்தை கலைப்பது எப்படி?

சென்னையில் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறையின் 8 பிரிவுகள் செயல்படுகின்றன. அவர்கள் இணைந்து திமுக ஆட்சியில் மொத்தமாக பதிவு செய்த FIRகள் 75 மட்டுமே. அதிலும் 2024ம் வருடத்தில் கடந்த 8 மாதங்களில் வெறும் 4 FIRகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1.5 வருடங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவி வகிக்கும் Abhay Kumar Singh IPS காலத்தில் DVAC தூக்கத்தில் இருக்கிறதா அல்லது போதையில் இருக்கிறதா என்று தெரியாத மோசமான நிலையில் இருக்கிறது.

அறப்போர் கொடுத்துள்ள KP Park ஊழல் புகார் மற்றும் Smart City ஊழல் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி கொடுக்காமல் அதற்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை விழுங்கி செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை இப்படி தூங்கிக் கொண்டு இருப்பதால் ஊழல்வாதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்களின் தூக்கத்தை நாம் தான் கலைக்க வேண்டும். வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு அறப்போர் அலுவலகத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு காப்பி பொடி அனுப்பி அவர்கள் தூக்கத்தை கலைக்க முயற்சி செய்ய இருக்கிறோம். நீங்களும் காப்பி பொடியுடன் வந்தால் நமது அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கலாம். #WakeUpDVAC

Meeting Date – Sunday 15 Sep 2024, Time – 5 PM

Arappor Office Location – maps.app.goo.gl/vAExrimU4jy5sQ


Leave a Comment